
தன்வந்திரி
எல்லோருக்குமே நோயில்லாமல் வாழ வேண்டும் என்கிற ஆசை உண்டு. அது மட்டுமல்லாமல் எப்பொழுதும் நாம் இளமையாக காட்டிக் கொள்ள தான் விரும்புவோம். எவ்வளவு வயதானாலும் நமக்கு நாம் எப்பொழுதுமே இளமையாக இருக்கிறோம் என்கிற நினைப்பு தான் மனதிற்குள் இருக்கும். இளமையாக வாழ பல்வேறு விஞ்ஞானிகள் என்னவெல்லாமோ கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதுவும் அவர்களுக்கு பலன் கொடுக்கவில்லை.
இவ்வளவு நவீன காலத்திலும் செய்ய முடியாத ஒன்றை அந்த காலத்தில் சித்தர்கள் செய்து காட்டி சாதித்துள்ளனர் என்று கேட்கும் பொழுதே நமக்கு வியப்பாக இருக்கும். கடுமையான தவத்தால் ஈடில்லா சக்திகளை சித்தர்கள் பெற்று, இன்றும் பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பதாக பல்வேறு தரப்பினர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தன்வந்திரி சித்தர் நோயில்லாத வாழ்வை அருள்பவர். இவரின் அருள் பெற இந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படித்து வாருங்கள்.
வைத்தீஸ்வரன் கோவிலில் பலகாலம் தவம் புரிந்து அங்கேயே ஜீவ சமாதி அடைந்தவர் தன்வந்திரி சித்தர் ஆவார். இன்றும் அக்கோவிலை சுற்றி சித்தரின் ஆன்மா உலாவிக் கொண்டிருப்பதாக அங்குள்ள மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இவரின் அருளைப் பெறுவதற்கு இவருடைய இந்த மந்திரத்தை அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும். ஒரு சிறு குண்டூசி சத்தம் கூட கேட்காத ஒரு இடத்தில் அமைதியாக தியான நிலையில் அமர வேண்டும். தியானத்திற்கு உரிய ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ள வேண்டும். தன்வந்திரி சித்தர் உடைய புகைப்படத்தை வைத்து, அவருக்கு முன்னால் அகல் தீபம் ஒன்றை வைத்து, அதனுள் எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் தன்வந்திரி சித்தரை மனதில் நிறுத்திக் கொண்டு கீழ்வரும் இந்த மந்திரத்தை தொடர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும்.